சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ்ஷாக தவா பன்னீர் மசாலாவை செய்து வீட்டில் உள்ளோரை அசத்தலாம் NPR-மசாலாவுடன்??
தேவையான பொருட்கள்:-
* பன்னீர் – 1 கப்
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி – 2 (அரைத்துக் கொள்ளவும்)
* குடைமிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
* NPR மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* சீரகப் பொடி – 3/4 டீஸ்பூன்
* NPR கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
* காய்ந்த வெந்தய கீரை – 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி – தேவையான அளவு
* உப்பு – சுவைக்கேற்ப
* தாளிப்பதற்கு:-*
* வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
செய்முறை:-
* தவா பன்னீர் மசாலா செய்வதற்கு முதலில் தவா தேவை.
ஒருவேளை தவா இல்லாவிட்டால், கடாயை வேண்டுமானாலும்
பயன்படுத்தலாம். இப்போது ரெசிபிக்கு போகலாம்.
* அடுப்பில் தவாவை வைத்து, அதில் வெண்ணெயைப் போட்டு
உருகியதும், சீரகத்தைப் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி,
பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு, நன்கு
வதக்க வேண்டும்.
* அதன் பின் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து
ஒருமுறை கிளறி, NPR மிளகாய் தூள், சீரகப் கொடி மற்றும் NPR கரம் மசாலா
சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
* தக்காளி நன்கு வெந்து பச்சை வாசனை போன பின்,
மசாலாவானது நீரின்றி வறண்டு இருக்கும். அப்போது சிறிது நீர்
தெளித்து, பன்னீர் துண்டுகளை சேர்த்து, மசாலா பன்னீருடன்
சேருமாறு நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியில் அதன் மேல் காய்ந்த வெந்தய கீரையை கையால்
நசுக்கி தூவி, கொத்தமல்லியையும் சேர்த்து கிளறி இறக்கினால்,
சுவையான தவா பன்னீர் மசாலா தயார்!