ருசியான பருப்பு உருண்டை குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.!
தேவையான பொருட்கள்:-
- துவரம்பருப்பு – கால் கப்
2.இஞ்சி – 1 துண்டு
- மிளகு, சோம்பு, சீரகம் – சிறிதளவு
- கசகசா – சிறிதளவு
- தேங்காய் துருவல் – கால் கப்
- தக்காளி, பெ.வெங்காயம் – 3
- புளி – நெல்லிக்காய் அளவு
- NPR குழம்பு மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
- NPR கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
- NPR மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
- NPR மஞ்சள்தூள் – சிறிதளவு
- எண்ணெய், உப்பு – தேவைக்கு
- கடுகு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு
- சாம்பார் வெங்காயம் – 10
- கொத்தமல்லிதழை, கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:-
- சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- புளியை சிறிதளவு நீரில் கரைத்து கொள்ளவும்.
- கடலைப்பருப்பு மற்றும் துவரம் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.
- மிக்சியில் முதலில் இஞ்சி, மிளகு, சீரகம் போன்றவற்றை போட்டு அரைத்துக்கொள்ள வேண்டும்.
- பின்னர் அதனுடன் பருப்பு வகைகளை லேசாக அரைத்து, சிறிதளவு வெங்காயத்தையும் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேக வைத்துக்கொள்ள வேண்டும்.
- பின்னர் தக்காளி, கசகசா, மீதமிருக்கும் வெங்காயம், சோம்பு மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சாம்பார் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் அரைத்து வைத்த மசாலாக்களை கொட்டி வதக்கவேண்டும்.
- பின்னர் அதனுடன் NPR குழம்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.
- பச்சை வாசம் நீங்கியதும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவேண்டும்.
- அதனுடன் புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
- நன்கு கொதித்து வந்ததும் வேக வைத்துள்ள உருண்டைகளை போட்டு 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து NPR கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறலாம்.
- சூப்பரான பருப்பு உருண்டை குழம்பு ரெடி.