சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ்ஷாக தவா பன்னீர் மசாலாவை செய்து வீட்டில் உள்ளோரை அசத்தலாம் NPR-மசாலாவுடன்??

தேவையான பொருட்கள்:-

* பன்னீர் – 1 கப்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 (அரைத்துக் கொள்ளவும்)

* குடைமிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* NPR மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* சீரகப் பொடி – 3/4 டீஸ்பூன்

* NPR கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* காய்ந்த வெந்தய கீரை – 1 டீஸ்பூன்

* கொத்தமல்லி – தேவையான அளவு

* உப்பு – சுவைக்கேற்ப

 

* தாளிப்பதற்கு:-*

* வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை:-

* தவா பன்னீர் மசாலா செய்வதற்கு முதலில் தவா தேவை.

ஒருவேளை தவா இல்லாவிட்டால், கடாயை வேண்டுமானாலும்

பயன்படுத்தலாம். இப்போது ரெசிபிக்கு போகலாம்.

* அடுப்பில் தவாவை வைத்து, அதில் வெண்ணெயைப் போட்டு

உருகியதும், சீரகத்தைப் போட்டு தாளித்துக் கொள்ளவும்.

* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி,

பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு, நன்கு

வதக்க வேண்டும்.

* அதன் பின் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

* அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து

ஒருமுறை கிளறி, NPR மிளகாய் தூள், சீரகப் கொடி மற்றும் NPR கரம் மசாலா

சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.

* தக்காளி நன்கு வெந்து பச்சை வாசனை போன பின்,

மசாலாவானது நீரின்றி வறண்டு இருக்கும். அப்போது சிறிது நீர்

தெளித்து, பன்னீர் துண்டுகளை சேர்த்து, மசாலா பன்னீருடன்

சேருமாறு நன்கு கிளறி விட வேண்டும்.

* இறுதியில் அதன் மேல் காய்ந்த வெந்தய கீரையை கையால்

நசுக்கி தூவி, கொத்தமல்லியையும் சேர்த்து கிளறி இறக்கினால்,

சுவையான தவா பன்னீர் மசாலா தயார்!

Translate »